Skip to main content

திருப்பதி தேவஸ்தானத்தை சொந்த சொத்தாக்கும் ஜெகன்மோகன்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 


ஆந்திராவில் ஆட்சி மற்றும் அரசியலின் மற்றொரு அதிகாரமிக்க இடம் திருமலை – திருப்பதி தேவஸ்தானம். ஆயிரக்கணக்கான நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். உலகம் முழுவதிலும் இருந்து வெங்கடேசபெருமாளை தரிசனம் செய்ய தினமும் ஒரு லட்சம் பேர் வருகிறார்கள். உலகின் பணக்கார கடவுள் என போற்றப்படுகிறது திருப்பதி. ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இங்கு பட்ஜெட் போடப்படுகிறது. இந்தியா முழுவதும் பல பணிகள் தேவஸ்தானத்தால் செய்யப்படுகிறது.

 

j


இதனால் இங்கு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையே அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தனது கட்சியை சேர்ந்த கடப்பா நிர்வாகி, புட்டா சுதாகர் யாதவ்வை தேவஸ்தான தலைவராக நியமித்திருந்தார்.


ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் சுதாகர் யாதவ் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. புதிய அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பாரெட்டி நியமனம் செய்யப்பட்டார். இன்னும் உறுப்பினர்கள் நியமனம் நடைபெறவில்லை.


தேவஸ்தானத்துக்கு அறங்காவலர் குழு என ஒன்று இருந்தாலும் அதிகாரிகள் அடங்கிய நிர்வாக குழு மிக முக்கியமானது. மனிதனுக்கு இரண்டு கண்களை போல இது. திட்டங்கள் இயற்றுவது அறங்காவலர் குழுவாக இருந்தாலும் அதனை செயல்படுத்துவது நிர்வாக குழு என்பதால் நிர்வாக ரீதியாக தேவஸ்தான தலைமை செயல் அலுவலராக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே நியமிக்கப்படுவது தான் நடைமுறை. அந்த பதவியில் அனில்குமார்சிங்கால் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தார். இப்போது அவரை மாற்றிவிட்டு முதல்வர் ஜெகன்மோகனின் மனைவியின் உறவினரான ஐ.ஆர்.எஸ் அதிகாரி தர்மாரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தர்மாரெட்டி வெளியுறவுத்துறையில் பணியில் இருந்தார். அவரை ஆந்திர மாநில பணிக்கு மாற்றி, அவரிடம் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி பணியை ஒப்படைத்துள்ளார் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி.


ஐ.ஏ.எஸ் சாக உள்ளவர் தான் நியமனம் செய்ய வேண்டும் என்கிற விதியை மீறுவதை முதல்வராக இருந்த அவரது தந்தை ராஜசேகர ரெட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டார். அவர் முதல்வராக இருந்தபோது இந்த தர்மாரெட்டியை தலைமை செயல் அலுவலராக கொண்டு வந்தார். அதனையே இவரும் செய்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

8 நாளில் முடிவுக்கு வந்த அரசியல்; ஆந்திராவை அதிரச் செய்த அம்பத்தி ராயுடு

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
Ambati Rayudu has announced his resignation from YSR Congress Party

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு, ஐ.பி.எல் போட்டிகளில் கேப்டன் தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடி வந்தார். கடந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், அந்த சீசனுடன் ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதற்கு முன்னதாக தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு கடந்த 28 ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து தன்னை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியிலிருந்து விலகவும், அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இது” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியில் சேர்ந்த 9 நாள் முழுதாக முடியாத நிலையில் அம்பத்தி ராயுடு கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரயில் விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Train accident- 10 lakh rupees relief announced for the family of the deceased

 

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது.

 

இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ரயில் விபத்து நடந்துள்ள இடத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளது.மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சிக்னல் கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உதவி எண்கள்: புவனேஷ்வர் 0674-2301525, 2303069, வால்டெய்ர் -0891-2885914, 89127 46330, 89127 44619, 81060 53051, 81060 53052, 85000 41670, 85000 41671, ஸ்ரீகாகுளம்  0891-2885911, 2885912, 2885913, 2885914.