Advertisment

இந்தியாவில் மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான்..!

omicron

Advertisment

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்கரோனா, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிவருகிறது. இந்தியாவிலும்கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த இருவரில் ஒருவர் தென்னப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இன்னொருவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்.

இந்தநிலையில், தற்போது மேலும் ஒரு நபருக்குஒமிக்ரான் கரோனா பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயிலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்த நபருக்கு ஒமிக்ரான் கரோனாஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைக் குஜராத் மாநில சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கரோனாபாதிக்கப்பட்டவரின்மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்குஜராத் மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

India Gujarat OMICRON
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe