ADVERTISEMENT
அதே சமயம் டெல்லியில் சிஐஐ சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “2024 ஆம் ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது. 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மரபுப்படி இடைக்கால பட்ஜெட்டாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே வரும் பிப்ரவரியில் பட்ஜெட், செலவு மானியக் கோரிக்கையாகவே தாக்கல் செய்யப்படும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது” எனத் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments