Skip to main content

‘ஜிப்மரில் அவசர, அவசிய சிகிச்சைக்கு தடையில்லை’- ஆளுநர் அறிவிப்பு! 

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

There is no ban on emergency and necessary treatment in jipmer

 

கரோனா தொற்று காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கருத்து புதுச்சேரியில் பரவி வருகிறது. இதையடுத்து புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று, திரும்பி வருகின்றனர். மேலும் பலர் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் ஜிப்மரில் அவசர, அவசியமான சிகிச்சைகள் மறுக்கப்படாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

நேற்று சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன். 60 சதவீதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்படையாத வகையில் மருத்துவ சேவை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே அவசர சிகிச்சையும், அவசியமான சிகிச்சையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைகளில் மறுக்கப்படாது” என்றார்.

 

There is no ban on emergency and necessary treatment in jipmer

 

இதனிடையே ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ‘புதுச்சேரியில் தினசரி சுமார் 2500 பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிப்மர் வெளிப்புற சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. ஜிப்மரின் முன்கள பணியாளர்களும் கரோனாவால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில் அனைத்து துறைகளின் குறிப்பிட்ட முன் களப்பணியாளர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். 

 

கரோனாவால் பாதிப்படைந்த மருத்துவர்கள் கூட வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஜிப்மரில் நோயாளிகளுக்கு தனிப் பிரிவில் ஆக்சிஜன் மற்றும் செயற்கை சுவாச கருவிகள் உடன் கூடிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிப்மரில் சாமானிய மக்களின் நலன் கருதி வெளிப்புற சிகிச்சை சேவை தொடர வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தல்களை ஜிப்மர் அறிந்துள்ளது. வெளிப்புற சிகிச்சைகளை நிறுத்தி விட்டதாக சமூக ஊடங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை.

 

அனைத்து வெளிப்புற சேவைகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. இம்மருத்துவமனையில் வழக்கமாக 10,000 புதிய நோயாளிகள் தினமும் பதிவு செய்யப்படுவதால் மத்திய அரசின் தனிமனித இடைவெளி, கரோனா விதிமுறைகள் அமல்படுத்த இயலவில்லை. மேலும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. தீவிர மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்சினைகள் உடையவர்களும் மட்டும் ஜிப்மர் மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.