Skip to main content

''ஜனநாயகத்தைக் காக்க அரசியலமைப்பு இருக்கிறது... ஆனால் அரசியல் கட்சிகளுக்குள்தான் ஜனநாயகம் இல்லை''-மோடி பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

There is a constitution to protect democracy ... but there is no democracy within political parties - Modi talks

 

இந்திய அரசியல் சாசன நாளான இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ''பல பிரச்சனைகள் ஏற்பட்டபோதும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அரசியலமைப்பு உதவியது. தற்போது நேரடி காலனி ஆதிக்கம் இல்லாவிடில் காலனித்துவ மனநிலை முடியவில்லை. வளரும் நாடுகளின் வளர்ச்சி பயணத்தில் ஏற்படும் தடைகளே இதற்கான உதாரணம்'' என பேசினார்.

 

முன்னதாக இன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அரசியல் சாசன விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கிவைக்க, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அரசியலமைப்பு தின விழா அண்ணல் அம்பேத்கருக்கும் நாடாளுமன்றத்திற்கு மரியாதை செலுத்தக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து அண்ணல் அம்பேத்கருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அவமரியாதை ஏற்படுத்திவிட்டனர். ஜனநாயகத்தைக் காப்பதற்காகத்தான் அரசியலமைப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளுக்குள் ஜனநாயகம் இல்லை. பல கட்சிகளில் அரசியல் கட்சிகளில் குடும்ப அரசியல் நிலவுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து'' என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.