Skip to main content

இலங்கை அமைச்சரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்தியத் தலைவர்களுக்கு நன்றி! -செந்தில் தொண்டமான் அறிக்கை!

Published on 05/06/2020 | Edited on 08/06/2020

 

 Thanks to the Indian leaders who condoled the demise of the Sri Lankan Minister! Senthil Thondaman Report!

                                                            ஆறுமுகன்  தொண்டமான் 

 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த இந்தியத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இலங்கை ஊவா மாகாண முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான்.
 


மலையகத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.  தொழிற்சங்கவாதியான இவர் கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தோட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் கடந்த, 2020 மே-26 ஆம் தேதி இந்திய தூதரைச் சந்தித்து மலையகத் தமிழகர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் குறித்து விவாதித்தார்.

பிறகு, இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றுவிட்டு தனது பத்தரமுல்லயிலுள்ள வீட்டிற்குச் சென்றவர் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே சரிந்தார். இதனால், அவசர அவசரமாக அருகிலுள்ள தலங்கம மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட ஆறுமுகன் தொண்டமான் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 56 வயதிலேயே அவரது இறப்பு இலங்கை மற்றும் தமிழகத் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

 


இந்நிலையில், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததோடு இந்திய வம்சாவளி தமிழர்களுக்குப் பேரிழப்பு என இரங்கல் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தனர்.  
 

 Thanks to the Indian leaders who condoled the demise of the Sri Lankan Minister! Senthil Thondaman Report!

                                                         செந்தில் தொண்டமான் 


இதுகுறித்து, அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் மைத்துனரும் இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை மத்திய அமைச்சராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு செய்தி அறிந்து தாங்கள் அனுப்பிய இரங்கல் செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது.  துயரமான  நேரத்தில் எங்களின் துக்கத்தில் நீங்கள் பங்கெடுத்தது மிகவும் ஆறுதலாக இருந்தது” என்று நன்றி தெரிவித்தார். கௌரவ அமைச்சர் ஆறுமுக தொண்டமான் அவர்களின் மறைவுக்கு  இரங்கல் செய்தி  அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி -தமிழக முதல்வர்,  ஓ. பன்னீர்செல்வம் -துணை முதல்வர், மு. க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க. தலைவர்,  கி.வீரமணி தலைவர் - திராவிடர் கழகம், வைகோ -ம.தி.மு.க. பொதுச் செயலாளர்,  விஜயகாந்த் - தலைவர், தே.மு.தி.க., தமிழக காங்கிரஸ் கமிட்டி- கந்தசாமி, அமைச்சர்- சமூகநலத்துறை, ராமதாஸ் -பா.ம.க. நிறுவனர், திருமாவளவன் எம்.பி.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கனிமொழி -மக்களவை உறுப்பினர், திருநாவுக்கரசர்- நாடாளுமன்ற உறுப்பினர்,  புதுச்சேரி,  டி.டி.வி. தினகரன்- அ.மு.மு.க. பொதுச் செயலாளர், அன்புமணி- பா.ம.க. இளைஞரணி தலைவர், ஜி.கே.வாசன் -தலைவர்- தமிழ் மாநில காங்கிரஸ், சீமான் -நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயர்களைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டு நன்றிகள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.