Skip to main content

“இதற்கு மட்டும் மத்திய அரசுக்கு நன்றி; இலங்கையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை'' - நாராயணசாமி பேட்டி

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

 "Thank you to the central government only for this; the Tamil Nadu government has no authority to release Sri Lankans" - Narayanasamy interview

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதில் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் மட்டும் திருச்சி மத்திய சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விடுதலைக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்ததோடு 'குற்றவாளிகளை நாட்டில் நடமாட விடக்கூடாது' என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி பேசுகையில், ''அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷும், புதுச்சேரி மாநிலத்திலிருந்து நானும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தோம். இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ராஜீவ்காந்தியின் படுகொலையில் மத்திய அரசினுடைய நிலை என்ன என்பதை அவர்கள் குறிப்பிடாத காரணத்தாலும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அதற்கு எந்த பதிலும் சொல்லாத காரணத்தாலும் ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரறிவாளனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 "Thank you to the central government only for this; the Tamil Nadu government has no authority to release Sri Lankans" - Narayanasamy interview

 

இதை எதிர்த்து, மத்திய அரசு தன்னுடைய தவற்றை உணர்ந்து அந்த வழக்கில் மறுபரிசீலனை செய்யும்படி மறுசீராய்வு மனு போட வேண்டும் என நான் அறிக்கை விட்டிருந்தேன். இது சம்பந்தமாகக் கடிதமும் எழுதியிருந்தேன். இதற்கிடையில் நேற்றைய முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசானது ராஜீவ்காந்தி படுகொலையில் ஏழு பேர் விடுதலை செய்தது தங்களுடைய கருத்துக்களைக் கேட்காமல் அது கூறப்பட்டிருக்கிறது. மத்திய அரசினுடைய விளக்கத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கவில்லை. அது மட்டுமல்ல அதில் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தமிழக அரசுக்கு அவர்களை விடுதலை செய்வதற்கு அதிகாரம் கிடையாது. தமிழக அமைச்சரவை முடிவு செய்தாலும் கூட, அதை நீதிமன்றம் மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெளிவாகக் கூறி மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதற்கு மட்டும் மத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அது மட்டுமல்ல தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்களும் மறுசீராய்வு மனுவில் கலந்து கொள்வோம். ராஜீவ்காந்தியின் படுகொலை இந்த நாட்டை உலுக்கி இருக்கிறது. ஒரு நாட்டினுடைய பிரதமர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் சர்வ சாதாரணமாக அவர்கள் சிறையில் இருந்தார்கள். 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மன்னித்துவிட்டார்கள் என்று சொல்லி அவர்களது விடுதலையை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. இது மிகப்பெரிய வருத்தத்தை எங்களுக்கு அளிக்கிறது. பல குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்காக 40 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவிட்டார்கள் என்பதைக் காரணம் காட்டி வெளியே அனுப்புவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.