Advertisment

என்.சி.பி கட்சியின் மூத்த தலைவர் சுனில் தட்கரேவுக்கு கரோனா உறுதி!

ghj

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 4 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், ராய்கட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் தட்கரேவுக்கு தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe