Skip to main content

விளம்பரத்திற்கே செலவு செய்யாத நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது....

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அமெரிக்கா மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்நிறுவனம் 2019-க்குள் டெஸ்லா தடம் பதிக்கும் என அறிவித்துள்ளது.

 

tesla

 

பூமியின் மேற்பரப்பில் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினை டெஸ்லா நிறுவனத்தின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ருவு டிராகன் எனும் ராக்கெட் கடந்த 4-ம் தேதி சென்று வெற்றிகரமாக திரும்பிவந்தது.
 

இந்நிறுவனம் தற்போது சீனாவில் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் தனது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியில் டெஸ்லா அமைக்கும் முதல் ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவும் முயற்சிகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா எடுத்து வருகிறது. ஆனால், இந்திய அரசு அதற்கு சரியாக ஒத்துழைக்காமல் இருந்துவருகிறது.
 

டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. இதனை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார். இந்தியாவில் மொத்தமே 6000 எலெக்ட்ரிக் கார்கள் தான் விற்பனை ஆகியிருக்கின்றன. எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் இந்திய அரசும் இறங்கியுள்ளது.  ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு சரியாக இல்லாமல் இருக்கிறது. இருந்தபோதும் இந்தியாவில் 2019-க்குள் டெஸ்லா தடம் பதிக்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

அமெரிக்காவின் பிரபலமான இந்நிறுவனம் இதுவரை தனது கார் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு செலவே செய்ததில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எலான் மஸ்க் அறிமுகம் செய்த ரோபோவில் இந்தியன் டச்

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

 Indian Touch in Elon Musk Launched Robot

 

டெஸ்லா விண்வெளி நிறுவனத்தின் உரிமையாளரும், அண்மையில் ட்விட்டர் வலைத்தளத்தை விலை கொடுத்து வாங்கி அதை நினைத்தபடியெல்லாம் மாற்றிக்கொண்டிருப்பவருமான எலான் மஸ்க் தற்போது மனித வடிவம் கொண்ட ரோபோக்களை வெளியிட்டுள்ளார்.

 

டெஸ்லா நிறுவனம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ தளத்தில் 'டெஸ்லா ஆப்டிமஸ்' என்ற மனித வடிவிலான ரோபோக்களை பற்றிய செயல்பாடுகளை வெளியிட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு அடி அங்குலம் உயரம் கொண்ட மனித வடிவிலான இந்த ரோபோக்கள் 56 கிலோ எடை கொண்டது. இவை கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்து முடிக்கிறது.

 

பல்வேறு உலக நாடுகளின் சிறு சிறு அம்சங்களும் இந்த ரோபோக்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் டச் ஆக இந்த ரோபோவில் சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 'நமஸ்தே' என்றால் 'வணக்கம்' வைக்கவும், நடராஜா ஆசனா, விருட்சாசனா ஆகிய இரண்டு ஆசனங்களையும் செய்து காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டு டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரோபோக்களின் செயல்பாடுகளை தற்பொழுது டெஸ்லா அறிமுகப்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக மனிதர்கள் ஒரே விதமான போர் அடிக்கும் வேலையைச் செய்வதைத் தவிர்க்கவே இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

நாட்டு நாட்டு பாடலுக்கு மரியாதை செலுத்திய டெஸ்லா

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Tesla pays tribute to naattu naattu song

 

முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளது இந்திய மொழிப் படங்களான 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு பாடலும் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படமும் விருது வாங்கியது. இதனால் இரண்டு படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தாங்கள் தயாரித்த கார்களின் மின் விளக்குகளை ஒளிர விட்டு 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிபரப்பு செய்து மரியாதை செலுத்தியுள்ளது. தற்பொழுது அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்தியா மற்றும் பூட்டான் ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மென் மற்றும் அவரது தூதரக குழுவினர் இப்பாடலை ஒலிக்கச் செய்து நடனமாடிய காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.