ADVERTISEMENT
ADVERTISEMENT
புல்வாமா தாக்குதலில் சேதமடைந்த கோவில் ஒன்றை அந்த பகுதியில் உள்ள இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சரிசெய்து வருகின்றனர். பிப்ரவரி 14 தாக்குதலின் போது சேதமடைந்த அந்த கோவிலை இரு மதத்தினரும் இணைந்து சரி செய்து வந்துள்ளனர். அதன் பிறகு அந்த பகுதியில் பதட்டம் அதிகரித்ததால் கோவில் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் மஹாசிவராத்திரியான நேற்று முதல் மீண்டும் இரு மதத்தினரும் இணைந்து 80 ஆண்டுகள் பழமையான அந்த கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Show comments