Skip to main content

பணியைப் பறித்த கரோனா... வாழைப்பழ வியாபாரியான ஆசிரியர்... நெகிழவைத்த முன்னாள் மாணவர்களின் உதவி...

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

telugu teacher selling banana in streets due to covid layoff


கரோனா பாதிப்பால் தனியார் பள்ளியில் 15 ஆண்டுகாலமாகப் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் வேலை இழந்ததால், தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 
 


நெல்லூரைச் சேர்ந்த வெங்கட சுப்பையா என்பவர் கடந்த 15 ஆண்டுகளாகத் தனியார்ப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். கடைசியாக நெல்லூரைச் சேர்ந்த நாராயணா பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கட சுப்பையா, ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது திடீரென ஒரு நாள், அவரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம், அவரது பணியில் திருப்தி இல்லை எனக்கூறி அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதனையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாகத் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கத் தொடங்கியுள்ளார் வெங்கட சுப்பையா.

இந்நிலையில் தங்களது ஆசிரியருக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து அறிந்த அவரின் முன்னாள் மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் மொத்தமாக 86,300 ரூபாயை அவருக்கு வழங்கி உதவி செய்துள்ளனர். இதனால் நெகிழ்ச்சியடைந்துள்ள வெங்கட சுப்பையா இதுகுறித்து கூறுகையில், "எனக்குப் பணம் கொடுக்க வேண்டாம், அதனை உங்களது எதிர்காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என முன்னாள் மாணவர்களிடம் கூறினேன். ஆனால் விடாப்பிடியாக அவர்கள் எனக்குப் பணம் கொடுத்துவிட்டனர். எங்களைப் போன்றவர்களுக்கு அரசு உதவ வேண்டும். குடும்பச் சூழல் காரணமாகவே தற்போது வாழைப்பழம் விற்கிறேன். ஆனால் விரைவில் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.