Skip to main content

“நான் அவன் இல்லை...” - இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Telugu engineer arrested for cheating student of 3.36 lakhs

 

கேரளாவைச் சேர்ந்த 22 வயது பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இவர் திருமணத்திற்கு வரன் பார்ப்பதற்காக மேட்ரிமோனியில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, சுய விவரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த மணிகண்ட சாய்(24) என்பவர் மேட்ரிமோனியில் கேரள பெண்ணின் சுய விவரத்தைப் பார்த்துள்ளார். மேலும், அதிலிருந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்ட மணிகண்ட சாய், தான் பி.டெக் முடித்துவிட்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாகப் பேச்சைத் தொடங்கியுள்ளார்.

 

இப்படியாகப் பேச்சைத் தொடர்ந்த மணிகண்ட சாய், அந்த பெண்ணிடம் “உங்களை எனக்குப் பிடித்துள்ளது, நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? எனக் கேட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் மணிகண்ட சாயிடம் அவரது புகைப்படத்தைக் கேட்க அவரும் அனுப்பி வைத்திருக்கிறார். இதில் மேட்ரிமோனியில் முகப்பு படத்தில் மணிகண்ட சாய் அவரது புகைப்படத்தை வைக்காமல் வேறு இளைஞரின் புகைப்படத்தை வைத்துள்ளார். அதனால் அந்த இளைஞரின் புகைப்படத்தையே கேரள பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படம் கேரள பெண்ணிற்குப் பிடித்துப்போக ஒன்றரை வருடங்களாக இருவரும் கைப்பேசியில் பேசத் தொடங்கியுள்ளனர். 

 

இந்த நிலையில், ஒருநாள் அந்த கேரள பெண்ணிடம் தனது தாய் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவச் செலவுக்கு ரூ. 3.50  லட்சம் பணம் தேவைப்படுவதாகவும் அழுத நிலையில் கேட்டுள்ளார். அந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ளத்தானே போகிறோம் என்று நம்பி, ரூ. 3.36 லட்சத்தை மணிகண்ட சாய் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட மணிகண்ட சாய், அந்த பெண்ணிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் அழைப்பிற்கு மணிகண்ட சாய் பதிலளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் பெண்ணிற்குச் சந்தேகம் எழவே, மணிகண்ட சாய்க்கு தொடர்ந்து தொலைப்பேசியில் அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்துள்ளார். பின்பு தொலைப்பேசி அழைப்பை எடுத்த மணிகண்ட சாயிடம், தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுங்க என்று கேட்க, பணத்தை எல்லாம் திருப்பித் தரமுடியாது என்று கூறிய மணிகண்ட சாய், உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது, அதனை மார்ஃபிங் செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கேரளப் பெண் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்ட சாயின் தொலைப்பேசி எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்ட சாய் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் மேட்ரிமோனியில் வேறு ஒருவரின் புகைப்படத்தை வைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா விரைந்த போலீஸ், மணிகண்ட சாயை கைது செய்து சென்னை அழைத்து வந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்துள்ளதும், நிறைய பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து தொலைப்பேசியில் வைத்திருந்தது தெரியவந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.