Skip to main content

ஒவைசி தலைமையிலான 'ஏஐஎம்ஐஎம்' கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது?

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 119 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர் ஆவர். இந்த மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சுமார் 88 தொகுதிகளை கைப்பற்றியது. அதே போல் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி ஏழு தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் பதவியேற்றார். தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 18 ஆக குறைந்தது.

 

 

OWAISI

 


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கிடையே அதிருப்தி ஏற்பட்டு, 12 காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்து தாங்கள் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைய உள்ளதாகவும், சட்டப்பேரவையில் எங்களை ராஷ்டிரிய சமிதி கட்சியில் 12 எம்எல்ஏக்கள் இணைந்து விட்டதாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முடிவால் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 6 ஆக உள்ளது.

 

 

OWAISI

 

 

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரில் மிகவும் செல்வாக்கு மிக்க கட்சியாக ஏஐஎம்ஐஎம் உள்ளது. இந்த கட்சிக்கு தற்போது 7 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் தெலங்கானா மாநில எதிர்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் எங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஒவைசி, எங்கள் கட்சியை விட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவாக உள்ளதால் சபாநாயகர் எங்களுக்கு அதிகாரப்பூர்வ எதிர்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அம்மாநில சட்டமன்றம் கூடும் போது இது குறித்து ஆலோசனை செய்து சபாநாயகர் இந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

“தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Tamilisai Selandararajan's explanation of his resignation

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.