Advertisment

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை; சிறப்பு அறிவிப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

 Telangana Govt announced a special notification on A baby born at a bus station

Advertisment

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணிப் பெண், தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக இந்த பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அப்போது குமாரிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதில் பதற்றமடைந்த அவரது கணவர் உதவிக்காக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்தார். இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள் குமாரிக்கு பிரசவ வலி அதிகமானதால், அங்கிருந்த போக்குவரத்துக் கழக பெண்கள் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில், குமாரிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து, தாயையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பேருந்து நிலையத்திலேயே பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்த சம்பவம் அம்மாநிலம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த நிலையில், கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்ததால் அக்குழந்தைக்கு தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் ஒரு அற்புதமான அறிவிப்பை அறிவித்தது. அதில், பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சிறப்பு பாஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

newborn telangana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe