தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக தமிழிசை சௌந்தரராஜன் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.