கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gfgf.jpg)
உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாளையோடு முடிவுக்கு வரும் சூழலில், பல மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் தங்களது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து வருகின்றனர். கடந்த 11 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஊரடங்கை இம்மாத இறுதி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வராத சூழலில், தங்களது மாநிலத்தில் கரோனா பரவலின் தீவிரத்தைப் பொருந்து அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களே ஊரடங்கை நீட்டித்து வருகின்றனர். ஏற்கனவே கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்கள் லாக்டவுனை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில் 6-வது மாநிலமாக தெலங்கானாவும் லாக்டவுனை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)