ADVERTISEMENT
ADVERTISEMENT
கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கை அமல்படுத்தியுள்ள பல்வேறு மாநிலங்கள், தளர்வுகளை அளித்து வருகின்றன. இந்தநிலையில் தெலங்கானா ஊரடங்கை முழுமையாக நீக்கியுள்ளது.
மேலும் கரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து இந்த முடிவினை எடுத்துள்ள தெலங்கானா அரசு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படியே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் நேற்று ஒரேநாளில் 1400 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. மேலும் அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு சதவீதம் 1.14 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments