Advertisment

நாளை முதல் ஊரடங்குமில்லை ..கட்டுப்பாடுகளும் இல்லை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தெலங்கனா!

telangana

Advertisment

கரோனாஇரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தினசரி கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்துஊரடங்கை அமல்படுத்தியுள்ள பல்வேறு மாநிலங்கள், தளர்வுகளை அளித்து வருகின்றன. இந்தநிலையில்தெலங்கானாஊரடங்கை முழுமையாக நீக்கியுள்ளது.

மேலும் கரோனாவைகட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், அதிகாரிகளுக்கு தெலங்கானாஅரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து இந்த முடிவினை எடுத்துள்ள தெலங்கானாஅரசு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படியே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் நேற்று ஒரேநாளில்1400 பேருக்கு மட்டுமே கரோனாஉறுதியானது. மேலும் அம்மாநிலத்தில் கரோனாபாதிப்பு சதவீதம் 1.14 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

corona virus lockdown telangana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe