Skip to main content

துப்பாக்கியை எடுத்து மிரட்டிய குற்றவாளிகள்... என்கவுண்டர் குறித்து காவல் ஆணையர் பேட்டி...

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், என்கவுண்டர் செய்யப்பட்ட போது என்ன நடந்தது என்பது குறித்து காவல் ஆணையர் சஜ்ஜானார் விளக்கம் அளித்துள்ளார்.

 

telangana commissioner about telangana encounter

 

 

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த என்கவுண்டர் குறித்து பேட்டியளித்த காவல் ஆணையர் சஜ்ஜானார், "டிசம்பர் 4 ஆம் தேதி 4 பேரையும் காவலில் எடுத்து, அடுத்த 2 நாட்கள் விசாரணை நடத்தினோம். அப்போது, பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பதாக அவர்கள் கூறியதால் அதை எடுக்க அழைத்து வந்தோம். 4 பேரையும் அழைத்துச் சென்ற போது 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக உடன் சென்றிருந்தனர். அப்போது, சென்ன கேசவலு மற்றும் முகமது ஆரிஃப் ஆகியோர் போலீசாரின் துப்பாக்கியை எடுத்து மிரட்டினர். நால்வரும் நாங்கள் சொல்லச் சொல்ல கேட்காமல் எங்களை தாக்கினர்.

இதில், இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. அப்போதுகூட நாங்கள் அமைதியான முறையில் சரணடைய வேண்டும் என கூறினோம். அதிகாலை 5.45 மணி முதல் 6.15 க்குள் என்கவுண்டர் சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. காயம் அடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்படும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

என்கவுண்டரில் உயிரிழந்த சென்னகேசவலு மனைவிக்கு 13 வயதுதான்... அதிர வைத்த அதிகாரிகளின் விசாரணை...

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

தெலங்கானா பெண் மருத்துவர் வழக்கில் எனக்கவுண்டரில் உயிரிழந்த சென்னகேசவலு என்ற நபரின் மனைவிக்கு 13 வயதுதான் ஆகிறது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

chennakesavalu wife issue

 

 

கடந்த மாதம் தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதாக அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இதில் கொல்லப்பட்ட சிவா மற்றும் நவீன் ஆகிய இருவரும் 18 வயது நிரம்பாதவர்கள் என அவர்கள் இருவரின் பெற்றோரும் தெரிவித்து வரும் நிலையில், உயிரிழந்த சென்னகேசவலுவின் மனைவிக்கு 13 வயது தான் ஆகிறது என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 28 வயதான சென்னகேசவலுவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு பிறந்த இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னகேசவலு மனைவியின் பள்ளியில் அவர் குறித்து அதிகாரிகள் விசாரித்த போதே, இந்த உண்மை தெரிய வந்துள்ளது. பெற்றோரை இழந்த அந்தப் பெண், தற்போது சென்னகேசவலுவின் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் காப்பகத்தினர், ஒருவாரத்துக்குள் அந்தப் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னகேசவலுவின் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

 

Next Story

ஜெகன் மோகனின் பாதையை பின்தொடரும் கேரள அரசு...

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக இயற்றப்பட்டுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரள மாநிலத்திலும் கொண்டுவருவதற்கான ஆய்வுகள் செய்யப்படும் என கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா உறுதியளித்துள்ளார்.  

 

kerala minister shailaja about implementing disha act in kerala

 

 

தெலங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பெரும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும், அதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும் அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.

அதன்படி, ஒருவர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களில் காவல்துறை விசாரணையை முடித்து, அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வகையில் புதிய சட்டம் ஆந்திராவில் இயற்றப்பட்டது. இதன் மூலம் 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் தூக்கிலிடப்படவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. பெண்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாகவோ துன்புறுத்தினால், முதல் முறையாகக் குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும், 2-வது முறையாகவும் தொடர்ந்து செய்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படும். இதற்காக 354இ பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலரும் இந்த சட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இதேபோன்ற ஒரு சட்டத்தை கேரளாவிலும் இயற்ற ஆய்வு செய்யப்படும் என கேரள சுகாதார மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா சட்டத்தைப் போல் கேரளாவிலும் சட்டம் இயற்றுவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆந்திர அரசு நிறைவேற்றியுள்ள திஷா மசோதாவை நாங்கள் ஆய்வு செய்வோம். அதில் என்ன விதமான அம்சங்கள் இருக்கின்றன, அதை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்வோம்" என தெரிவித்துள்ளார்.