Skip to main content

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

17-வது மக்களவை தேர்தல்  நாடு முழுவதும் ஏழு கட்டடங்களாக நடைபெற்று வருகிறது . ஏற்கெனவே நான்கு கட்ட மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் , இன்று ஐந்தாவது கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது . இந்நிலையில் இன்னும் 2 கட்ட மக்களவை தேர்தல் மட்டும் நிலுவையில் உள்ள நிலையில் , அதும் முடிந்தவுடன்  மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது . அதனைத் தொடர்ந்து மாநில அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர் .இதன் ஒரு பகுதியாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை , தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மாலை 6.00 மணியளவில் திருவனந்தப்புரத்தில் சந்தித்து பேசவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

 

 

TELANGANA CM

 

 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் பிரதமர் நரேந்திரமோடியே நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . அதே போல்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை திமுக கட்சி மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது . எனினும் மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பின்பே பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் மத்தியில் மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் இன்று முதற்கட்டமாக பினராயி விஜயன் மற்றும் சந்திர சேகரராவ் சந்திப்பு நடைப்பெறவுள்ளது . காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3 வது அணி குறித்த தீவீர ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளனர் . ஏற்கெனவே முன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சி எடுத்தார் பின்பு அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தத்க்கது .

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர்!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Telangana Chief Minister met Chandrasekhar Rao and inquired about his well-being

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

அதே சமயம் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ், கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். பின்பு வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்காக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர ராவின் உடல் நலம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சென்று விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story

டிசம்பர் 7இல் தெலங்கானா முதல்வர் பதவியேற்பு!

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Telangana Chief Minister sworn in on December 7

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. மிசோரத்திற்கு மட்டும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

 

இந்த சூழலில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். இவர் டிசம்பர் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல் முறையாகத் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.