Skip to main content

செல்போனில் பேசியபடி பாம்பின் மீது அமர்ந்த இளம்பெண் பரிதாப பலி!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். இவர் தாய்லாந்தில் வேலை செய்கிறார். இவர் மனைவி கீதா. தாய்லாந்தில் இருக்கும் கணவருடன் அடிக்கடி போனில் பேசுவது வழக்கம். இருவரும் மணிகணக்காய் பேசுவது வழக்கம். பேச்சு சுவாரஸ்யத்தில், அப்படியே வீட்டில் இருந்த படுக்கையறைக்குச் சென்றுள்ளார் கீதா. அப்போது பெட்டில், இரண்டு பாம்புகள் விளையாடிபடி கிடந்தன. இதைக் கீதா கவனிக்கவில்லை. கணவருடன் பேசியபடியே, அந்த பாம்புகளின் மீது அப்படியே அமர்ந்துவிட்டார். இதையடுத்து ஆவேசம் கொண்ட அந்தப் பாம்புகள் அவரைக் கொத்தின. உடனடியாக மயங்கிய அவரை, வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

ghjk



அவரது குடும்பத்தினர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அந்தப் பாம்புகள் அப்போதும் பெட்டிலேயே இருந்துள்ளன. இதையடுத்து அவர்கள், அந்த இரண்டு பாம்புகளையும் அடித்தே கொன்றுள்ளனர். பாம்புகள் இனச் சேர்க்கையில் இருந்தபோது, அந்தப் பெண் அதன் மீது அமர்ந்ததால், அவை கடித்துள்ளன என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீளப் பாம்பு!  

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
A 7-foot-long snake entered the house in Trichy

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேசை மீது சுமார் 7 அடி நீளப் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை சாத்தினார்.

அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடிய போது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
A nice snake that took a picture in a refrigerator near Cuddalore

கடலூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் பாம்பு பிடி வீரர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடனே வந்தார். அப்போது வீட்டில் எங்கு தேடியும் பாம்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழே குச்சியை விட்டுத் தட்டியபோது, திடீரென குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் பாம்பு ஏறி படம் எடுத்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே பாம்பைப் பிடிக்க பத்து நிமிடம் போராடி, பாம்பு பிடி வீரர் பாம்பைப் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பாம்பு படம் எடுத்து ஆடியபோது, அங்கிருந்தவர்கள் சூடம் ஏத்தி வழிபட்டனர். பாம்பு குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராடி பாம்பைப் பிடித்த பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்