Skip to main content

ரயில் பயணத்தில் டீ குடிப்பவரா நீங்கள்? ஒரு அதிர்ச்சி செய்தி!

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

ரயில் பெட்டியில் உள்ள கழிவறைக்குள் இருந்து டீ கேனில் நீர் நிரப்பும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

tea

 

மே 1ஆம் தேதி புனிட் யோகி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்தியன் ரயில்வேயில் வழங்கப்படும் டீ இது எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சுமார் 45 விநாடிகள் இருக்கும் அந்த வீடியோவில், ரயில் பெட்டி ஒன்றில் இருந்து டீ கேன்களை வியாபாரி ஒருவர் வெளியில் எடுத்துத் தருவதும், மற்றவர்கள் அதை எடுத்துச் செல்வதுமாக காட்சிகள் இருக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

 

 

அதில், இந்த வீடியோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை செண்ட்ரல் - ஐதரபாத் சார்மினார் இடையே செல்லும் சார்மினார் விரைவுரயில் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஒப்பந்ததாரர் சிவபிரசாத் என்பவர் சிக்கியுள்ளார். கழிவறை நீரை கேனில் நிரப்பவில்லை. மீதமிருந்த டீயைத்தான் புதிய கேனில் மாற்றினோம் என அவர் கூறியிருந்தாலும், அதற்கு உகந்த இடம் கழிவறை இல்லை எனக்கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அவருக்கான உரிமத்தையும் இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மயிலாடுதுறைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Chief Minister MK Stalin left for Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் தோட்டம் பால்பண்ணை என்ற பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (04.03.2024) காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணியளவில் திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இன்று இரவு 8.15 மணியளவில் சீர்காழி ரயில் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு கார் மூலம் மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதல்வரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.