ஆந்திரா காட்டில் தமிழர்கள் பிணம் -  வித்தியாசமான என்கெளண்டரா ?

kadappa

ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் இன்று மதியம் வனத்துறையால் மீட்கப்பட்டனவாம்.

அவர்கள் யார் ?, செம்மரம் வெட்ட வந்தவர்களா? கொலை செய்யப்பட்டார்களா? என ஆந்திரா போலீசார் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு செம்மரம் வெட்டியதாக 12 தமிழர்களை கைது செய்தது ஆந்திரா போலிஸ். அப்போது 4 பேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தேடப்படுகிறார்கள் என அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

- ராஜா

Tamils in the Jungle in Andhra Jungle - Unusual Encounters?
இதையும் படியுங்கள்
Subscribe