பொங்கல் திருநாளையொட்டி, தமிழக மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டும், வீடு வாசலில் வண்ணமிகு கோலமிட்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்றும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் இன்று (14/01/2021) அதிகாலை விஷேச பூஜைகள் நடைபெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக மக்களுக்கு 'பொங்கல் தின' வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.