சீன அதிபர் ஸீ ஜின்பிங் இந்தியா வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

சீன அதிபர் ஸீ ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அக்டோபர் 11- ஆம் தேதி இந்தியா வருகிறார். சீன அதிபரின் இந்திய பயணத்தில் முக்கிய பயணமாக கருதப்படுகிறது தமிழக பயணம். இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங், அக்டோபர் 11- ஆம் தேதி முதல் அக்டோபர் 12- ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TAMILNADU INDIA PRIME MINISTER NARENDRA MODI AND CHINA PRESIDENT XI JIN PING

Advertisment

அதேபோல் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் மற்றும் காஷ்மீர், இந்தியா- சீனா எல்லை பிரச்சனை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் விவாதிக்கவுள்ளனர். பின்பு இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரம் கடல் பகுதியில் இரண்டு கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

alt="TAMILNADU INDIA PRIME MINISTER NARENDRA MODI AND CHINA PRESIDENT XI JIN PING " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b205ed68-7a8a-4fcf-93bc-de96b714c226" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_28.jpg" />

Advertisment