டிக் டாக் வீடியோவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு கலை நயத்துடன் நடனம் ஆடியவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மொழிகளுக்கு ஒரு வாழ்த்து பாடல் என்பது கட்டாயம் இருக்கும். அதை போல தமிழ் மொழிக்கு தமிழ்தாய் வாழத்தாக நீரருங் கடலுடுத்த நிலமடைந்தை என ஆரம்பிக்கும் பாடம் வாழ்த்து பாடலாக இருக்கிறது. இந்த வாழத்துப்பாடல் பள்ளிகளிலும், மற்ற அரசு விழாக்களிலும் பாடப்படும்.
மனோன்மனியம் பெ. சுந்தரனார் எழுதிய இந்த பாடலுக்கு, தற்போது நடன ஆசிரியர் ஒருவர் கலைநயத்துடன் நடனம் ஆடியுள்ளார். அவரின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப்போலவே பலரும் முயற்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
Follow Us