Skip to main content

ரசாயன ஆயுதம் தாக்கியதால் உடல் எரிந்து கதறிய சிரியா சிறுவன்?

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

சிரியாவின் குர்திஷ் தன்னாட்சி பகுதியிலிருந்து குர்திஷ் தீவிரவாதிகளை வெளியேற்ற துருக்கி ராணுவம் சில நாட்களாக கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் துருக்கி ராணுவம் ரசாயனக் குண்டுகளை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வியட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்க விமானங்கள் நாபாம் எனப்படும் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி உலகையே கொந்தளிக்கச் செய்தது. பாஸ்பரஸை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்தக் குண்டுகள் மக்கள் உடலையே எரியச்செய்யும். வியட்னாம் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக ராசாயன ஆயுதங்களை பயன்படுத்த ஐ.நா. தடைவிதித்தது.

 

Syrian boy burnt to death with chemical weapon?

 

ஆனாலும், இந்த ஆயுதங்களை பயனபடுத்துவதாகவும் இவற்றை தயாரிப்பதாகவும் தனக்கு பிடிக்காத நாடுகளை அமெரிக்கா குற்றம்சாட்டுவது வாடிக்கை. இப்போதும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி குர்திஷ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவத்தின் மீது இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.

ஞாயிறன்று ரசாயனக் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் சிலரை மருத்துவமனைகளில் பார்த்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். ராஸ் அல் அய்ன் அருகே உள்ள டல் டாம்ர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு சிறுவனின் வீடியோ உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “அப்பா உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். எனது எரியும் உடலை அணையுங்கள்” என்று அந்தச் சிறுவன் கதறுகிறான். அவனுடைய கதறை 12 நேரம் நீடித்தது. பிறகுதான் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்ன சிகிச்சை அளிப்பது என்பது தெரியாமல் மருத்துவர்கள் தவித்ததாக கூறப்படுகிறது.

இதை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் மறுத்திருக்கிறார். சர்வதேச குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனிடையே குர்திஷ் தீவிரவாதிகளை குறிப்பிட்ட பாதுகாப்பு கோடுக்கு அப்பால் செல்லும்படி துருக்கி அரசு கேட்டுக்கொண்டதை சமரசக்குழு ஏற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்; 6 பேர் கைது

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Assault on Sub-Inspector of Police; 6 people arrested

விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியில் கோவிலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அதனை தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை அங்கு இருந்த சிலர் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செஞ்சியைச் சேர்ந்த வாலிபர்கள் சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  இருதரப்பு மோதலை தடுக்க முயன்றார். அப்பொழுது சிங்கவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை கடுமையாக தாக்கியதோடு அவரது சட்டையையும் கிழித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை அழைத்துச் சென்று செஞ்சி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் அதிகாரியை தாக்கும் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.