Syed Hussain, who fought to the end and died while riding a horse,

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று பைசரன் புல்வெளிகளில் நேற்று ((22.04.2025) குதிரை சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்து வந்த பயங்கரவாத கும்பல், சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisment

இந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வரையப்பட்டுள்ளது. அஷிஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 3 பேரின் வரைபடங்கள் மற்றும் பெயர்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

Syed Hussain, who fought to the end and died while riding a horse,

இந்த தாக்குதல் சம்பவங்களை பயங்கரவாதிகள் தங்கள் தலையில் பொருத்தியிருந்த அதிநவீன ஹெல்மெட் கேமராவில் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது. பைன் மரக்காடுகள் உள்ள பைரசன் பள்ளத்தாக்கிற்கு வந்தது முதல் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியது வரை அனைத்து காட்சிகளும் பதிவாகி உள்ளது. சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொள்வதற்கு தேர்வு செய்தது; தாக்கும்போது உறவினர்கள் கதறி அழுதது போன்ற இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றாக தற்பொழுது வெளியாகி வருகிறது. அந்த வகையில் உயிரிழந்தவர்களில்ஒரு சிலர் உள்ளூர் மக்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக உள்ளூர் குதிரை ஓட்டி ஒருவர் பயங்கரவாதிகளை வீரத்துடன் எதிர்த்துபதிலுக்குத் தாக்க முயன்றதால் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

Advertisment

Syed Hussain, who fought to the end and died while riding a horse

சையது உசேன் என்பவர் அதே பகுதியில் குதிரை ஓட்டியாக பணியாற்றி வருகிறார். சுற்றுலா வருவோரை பள்ளத்தாக்கிற்கு குதிரையில் அழைத்துச் செல்வதை வாடிக்காக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுற்றுலாப் பயணிகள் 4 பேரை பைரசன் பள்ளத்தாக்கிற்கு குதிரையில் அழைத்துச் சென்றுள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்கு வந்த ஆறு பேரையும் சுற்றுலாப் பயணிகள் ராணுவத்தினர் என்றே கருதினர். இதனால் எந்தவித பதட்டமும் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் உள்ளூர் குதிரை ஓட்டியான சையது உசேனுக்கு அங்கிருந்தவர்கள் ராணுவத்தினர் இல்லை என்பதும் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதும் தெரியவந்தது. உடனடியாக அக்கும்பல் தாக்குதல் நடத்திய பொழுது சையது உசேன் பயங்கரவாத கும்பலில் ஒருவரின் கையில் இருந்தஏகே 47 துப்பாக்கியை பிடுங்கி யாரையும் தாக்கக் கூடாது என எச்சரிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தசுற்றுலாப் பயணிகளிடமும் இவர்கள் ராணுவத்தினர் அல்ல பயங்கரவாதிகள் என எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதனால் பயங்கரவாதிகள் குதிரை ஓட்டி சையது உசேனை கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.