Skip to main content

தங்க கடத்தல் விவகாரம்... ஸ்வப்னா பெயரில் வெளியான ஆடியோவால் பரபரப்பு...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

swapna suresh releases an audio about gold case

 

கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராகப் பார்க்கப்படும் ஸ்வப்னாவில் பெயரில் வெளியான ஆடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

 

இதில் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஸ்வப்னா என்ற தகவல் தொடர்பு துறையில் பணியாற்றும் பெண், இந்த விவகாரத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை எனவும், அதிகாரிகளின் ஆணையைப் பின்பற்றி எனது பணிகளை மட்டுமே செய்தேன் என, கூரை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். இதனிடையே இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

இந்நிலையில் ஸ்வப்னா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "ஐக்கிய அரபு அமீரக தூதரக தலைவர் என்னிடம் 'ஏன் தாமதம்' என்று கேட்டார். அதனால் நான் அந்த பார்சல் விவகாரத்தை சரி செய்துகொடுக்க சுங்கத்துறை உதவி ஆணையாளர் ராமமூர்த்தியிடம் பேசினேன். அதுதவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. நான் பார்க்கும் வேலை தொடர்பாக உயர் அதிகாரிகள், அரசு பணியாளர்கள், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உட்பட எல்லா அரசியல் கட்சியினருடன் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். இந்த தொடர்பு அனைத்தும் ஐக்கிய அமீரக தூதரக தலைவர் சொல்லும் பணிக்காக மட்டுமே தவிர சொந்த நலனுக்காக யாரிடமும் பேசியது இல்லை. 

 

ஒரு பெண்ணாகிய என்னை இதுபோல ஃப்ரேம் செய்து, என்னையும், என் குடும்பத்தையும் தற்கொலையின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இந்த துரோகம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மட்டும் தான். வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நீங்கள்தான் எங்கள் மரணத்திற்கு உத்தரவாதம். நான் இப்போது தலைமறைவாக இருப்பது, பெரிய தங்க கடத்தல் குற்றம் செய்ததற்காக அல்ல, பயத்தினால்தான், எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகத்தான். தேர்தலுக்காக அரசியல் செய்யாமல் உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்னையும் விசாரியுங்கள். யாருக்காகவோ இப்படிச்செய்கிறார்கள், இது தொடர்ந்தால் என்னைப்போன்ற ஏராளமான ஸ்வப்னாக்கள் இந்த நாட்டில் உயிரிழப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகன் தோற்க வேண்டும் தந்தை பேச்சு; நாய்கள் போன்றவர்கள் மகன் பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
competition retaliated Father Congress, son BJP in kerala

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன்படி, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில்,  கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி, பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, பா.ஜ.கவில் சேர்ந்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.ஆண்டனி, பா.ஜ.க வேட்பாளரான தனது மகன் இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மோடி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல்வர் பினராயி விஜயனை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது. பா.ஜ.க கீழே செல்கிறது. நாங்கள் ஆட்சி அமைக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். பா.ஜ.க சார்பில் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.கவில் இணைந்தது தவறு. அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை குடும்பமும், அரசியலும் வேறு வேறு தான்.

காங்கிரஸ் எனது மதம். மத்தியில் ஆளும் கட்சி இந்தியா என்ற கருத்தையே அழிக்க முயல்கிறது. தயவு செய்து இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்திலேயே பா.ஜ.க வேட்பாளர்கள் இருப்பார்கள். சபரிமலை பெண்கள் நுழைவு சர்ச்சையால் 2019 பொதுத் தேர்தலின் போது பா.ஜ.கவின் பொற்காலம் இருந்தது. மேலும் அவர்கள் சில கூடுதல் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, பாஜகவுக்கு சாதகமாக எந்த காரணியும் இல்லை. மேலும் அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெறப் போகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனம் நாசமாகி, ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். அந்த ஆபத்தை நாம் போக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் இந்த கருத்துக்கு அவரது மகனும், பா.ஜ.க வேட்பாளருமான அனில் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏ.கே.ஆண்டனி மீது பரிதாபப்படுகிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு வயது 84. அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், தேச விரோத காந்தி குடும்பத்துக்காக பணியாற்றி, ஆயுதப்படைகளை அவதூறு செய்த எம்.பி.க்காக பேசி வருகிறார். காலாவதியான எண்ணங்களைக் கொண்ட சில காலாவதியான தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்காக வேலை செய்பவர்கள் நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள் போன்றவர்கள்” என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் கருத்துக்கு அவரது மகனான பா.ஜ.க வேட்பாளர் பதிலடி கொடுத்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'13 ஆம் எண்... சாத்தானிய வழிபாடு'- கேட்டாலே திகில் பற்றும் மர்மம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'Number 13...Satanic Worship'-Mystery in Kerala

மாந்திரீகம், நரபலி என மர்மங்களுக்கு பெயர் போனது கேரளா. அண்மையாகவே கேரளாவில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் மர்மமான நிகழ்வு ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் 'சாத்தான் மதம்' என்ற ஒரு மதம் வளருவதாகவும், பெரும் பணக்கார புள்ளிகள்கூட அந்த மதத்தில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி, மகள், உறவினர் ஆகிய நான்கு பேர் சடலமாக கிடந்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையை நிகழ்த்தியது யார் என்ற தொடர் விசாரணையில் இந்த தம்பதியின் மகனான கேடல் என்பவர்தான் அந்த கொலைகளை செய்தது தெரியவந்தது. கோடாரியை பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்களை கேடல் கொலை செய்துள்ளார். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாத்தானிய வழிபாடு தான் இதற்கெல்லாம் காரணம் என்பது கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நவீன் தாமஸ், தேவி என்ற ஆயுர்வேத மருத்துவர்கள், ஆர்யா நாயர் என்ற ஆசிரியை ஆகிய மூவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

உயிர்த்தெழுந்த பிறகு வேறு ஒரு கிரகத்தில் வாழ வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நம்பியதாகவும், சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்ததும் தெரியவந்தது. எதிரிகளை பழிவாங்க, பணம் சொத்துக்களை பெற கேரளாவில் சாத்தானிய வழிபாடுகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு நகரங்களில் அதிகமானோர் சாத்தானிய வழிபாடுகளை பின்பற்றுவது தெரியவந்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடாத பகுதிகளில் இருக்கும் தனி வீடுகளில் கூடி தங்களது மதத்தை வளர்த்து வருவதாகவும், இந்த சாத்தான் வழிபாடு செய்பவருக்கு 13 ஆம் எண் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.