Advertisment

தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூக்கு 5 நாள் காவல்!

gh

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி, அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.

Advertisment

இதனையடுத்து பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஸ்வப்னா கைது செய்யப்பட்டார்.இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. ஸ்வப்னா உள்ளிட்ட நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷூக்கு, 5 நாட்கள் சுங்கத்துறை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொச்சி நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Advertisment

Swapna suresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe