sushma swaraj

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சாராக இருக்கும் ம.பி. மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா சுவராஜ், வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டில் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் இருந்ததால் அலுவலகத்திற்கு வராமலே இருந்தார். இவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சுஷ்மா எடுத்த முடிவையும் பாஜக மேலிடத்திற்கு தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisment