டெல்லி மாநில துணை நிலை ஆளூநர் மாநில அரசின் கருத்தை ஏற்று செயல்படவேண்டும். அவருக்கு நிர்வாகத்தில் தலையிட அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த தீர்ப்பு டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.