/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kolkata fire.jpg)
கொல்கத்தாவிலுள்ள கொல்கத்தா மருத்துவ கல்லூரி வளாகத்தில் பார்மசி துறை மற்றும் மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்த 250 நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
Advertisment
Follow Us