Skip to main content

உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படாதீர்கள் - சுப்ரமணியன் சுவாமி!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

subramanian swamy

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பும் 400 - ஐ நெருங்கி வருகிறது. உத்தரப்பிரதேசத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

 

இதனால் உத்தரப்பிரதேச தேர்தல் திட்டமிட்டபடி அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறுமா என்ற கேள்வி மெல்ல எழத் தொடங்கியுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் மோடிக்கும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் . இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒமிக்ரானுக்காக ஊரடங்கு போடப்பட்டாலும், உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியின் கீழ், உ.பி தேர்தல் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டாலும் ஆச்சரியமடைய வேண்டாம். இந்தாண்டு தொடக்கத்தில் நேரடியாக செய்ய முடியாததை, அடுத்தாண்டு தொடக்கத்தில் மறைமுகமாக செய்யலாம்" எனக் கூறியுள்ளார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாநில தேர்தல் முடிவுகள் - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

4 state election results  Chief Minister M. K. Stalin's greetings
கோப்புப்படம்

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் 4 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு காலமாக, வெற்றி பெற்றவர்களின் ஆட்சிக்காலம் அமைய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தெலங்கானா தேர்தல்; கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள்

 

Celebrities voted in Telangana Elections 2024

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதையடுத்து தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (30.11.2023) நடைபெற்று வருகிறது.   அங்கு பி.ஆர்.எஸ். கட்சி ஆளும் கட்சியாக இருந்த நிலையில், அக்கட்சிக்கும் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பலத்த போட்டி நிலவி வருகிறது. 119 தொகுதிகள் மொத்தம் இருக்கும் நிலையில், அத்தனை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

 

இந்த 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 13 தொகுதிகளில் மட்டும் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மற்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 3 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சுமார் 50 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் 375 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.

 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப் பிரபலங்களான சிரஞ்சீவி, ராஜமௌலி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், கீரவாணி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.