2021 - 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனால் நேற்று (01.02.2021) தாக்கல்செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் புதிதாகபெட்ரோல், டீசல்மீதுவேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே உயர்ந்துவரும் பெட்ரோல்மற்றும் டீசல்விலை மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகஎம்.பிசுப்ரமணிய சுவாமி, தனதுட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் பெட்ரோல் விற்கும்விலையை, அண்டை நாடுகளுடன், இராமாயணத்தின் அடிப்படையில், ஒப்பிடும் வகையிலான தகவல் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இராமனின்இந்தியாவில் பெட்ரோல்விலை 93 ரூபாய், சீதையின்நேபாளத்தில் 53 ரூபாய், இராவணனின் இலங்கையில்51 ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவிற்கு பாஜக ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அவரது பதிவிற்கு ஆதரவாக, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகிறது.