Skip to main content

கோவாக்சின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இன்று ஆய்வு செய்கிறது நிபுணர் குழு!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

covaxin

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. பொதுவாக தடுப்பூசிகள் மூன்று கட்டங்களாக சோதனை செய்யப்படும். இந்த மூன்றுகட்ட சோதனை தரவுகளை வைத்தே தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், மூன்றாவது கட்ட சோதனையின் தரவுகள் இன்றியே கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது.

 

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சமீபத்தில் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றவது கட்ட சோதனை தரவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என அத்தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கோவாக்சினின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு, இன்று (22.06.2021) கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை ஆய்வு செய்யப்போவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

நிபுணர் குழு ஆய்வுக்குப் பிறகு, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் இடையே  தடுப்பூசி சமர்ப்பித்தலுக்கு முந்தைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இந்தியா ஆய்வுசெய்வது கவனிக்கத்தக்கது. பாரத் பயோடெக் நிறுவனத்துடனான நாளைய கூட்டத்திற்குப் பிறகு, உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை ஆய்வுசெய்து அவசரகால அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.