ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ராம நவமியை முன்னிட்டு அசைவ உணவுகளைத் தவிர்க்கக்கோரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள மற்ற மாணவர்களிடம் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று இரவில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். பல்கலை வளாகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Show comments