Skip to main content

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவனுக்கு விருந்து வைத்த தந்தை!!!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

தன் மகன் தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவரது தந்தை விருந்து வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

feast

 

 

 

 

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த சுரேந்திரக்குமார் தியாஸ் திடிரென உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்துவைத்துள்ளார். விருந்து எதற்கு என்றே  தெரியாமல் வந்த உறவினர்களுக்கு வந்தபின்தான் காரணம் தெரிந்தது. தனது மகன் அசூஸ் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவன் தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவரது தந்தை, உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்துள்ளார். தன் தந்தை இப்படி செய்தது எனக்கு இன்னும் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. என்று தெரிவித்துள்ளான் அந்த  மாணவன்.

சார்ந்த செய்திகள்