Skip to main content

கல்லூரி தோழிகளின் குளியலறை வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பிய மாணவர் கைது

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
​    ​bangaluru

 

பொறியியல் பட்டதாரி மாணவர் ஒருவர், தனது வகுப்பு தோழியின் உதவியுடன் மாணவிகள் குளியலறை வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
 

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த சித்தார்த் என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் தங்கியுள்ளான். இவன் தன்னுடன் படிக்கும் சக தோழியுடன் பழகியுள்ளான். 
 

சித்தார்த்துடன் ஒருநாள் தன்னையே மறந்து பேசிக்கொண்டிதார் அந்த மாணவி. அந்த நேரத்தில் சித்தார்த்தின் பேச்சில் மயங்கிய அந்த மாணவி, தனது நிர்வாண வீடியோவை சித்தார்த்துடன் பகிர்ந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட சித்தார்த், அதனை வெளியில் விடக்கூடாது என்றால், பெண்கள் விடுதியில் உள்ள குளியலறையில் தான் கொடுக்கும் ஸ்பை கேமரா வைத்து, அதில் பதிவானதை தனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளான். 
 

இந்த செயலை செய்ய அந்த மாணவிக்கு விருப்பம் இல்லை, அதே நேரத்தில் தனது வீடியோ வெளியாகிவிடும் என்ற பயத்தில், பெண்கள் விடுதியில் மாணவிகள் குளிக்கும் அறைகளில் அந்த கேமராவை வைத்து, பின்னர் அதனை எடுத்து சித்தார்த்திடம் கொடுத்துள்ளார்.
 

சித்தார்த் இதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதே கல்லூரியில் படிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மாணவி சமூக வலைதளத்தில் தனது நிர்வாண படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அது ஒரு போலி கணக்கு என்று தெரிய வந்தது. மேலும் தேடுகையில் தனது குளியல் வீடியோக்களும் அதில் இருந்ததை கண்டார். 
 

இதுகுறித்து காவல்துறையை அணுகி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகாரை பெற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹார போலீசார் அந்த மாணவன் படிக்கும் கல்லூரிக்கு விவரத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதுடன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய ஆசாமி; காப்பு போட்ட காவல்துறை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Police action on Worker who threatened women by making obscene videos

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (42). இவர் அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் பல பெண்களுடன் பழகி வந்துள்ளதாகவும், அவர்களுடன் தனியே இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சில பெண்கள், பாரதிராஜாவுடன் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். 

அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா மீது அந்த பெண்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், பாரதிராஜாவின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.