Skip to main content

குதிரையில் ஊர்வலம் சென்றதால் தலித் இளைஞரின் திருமணத்தில் தாக்குதல்...

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

குஜராத் மாநிலத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபோதிலும் தலித் இளைஞர் திருமண ஊர்வலத்தில் கல் எரிந்து தாக்கிய வேற்று சமூகத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

dalit groom

 

 

சரிஃப்தா கிராமத்தில் நேற்று காலை 11 மணியளவில் ஆகாஷ் குமார் கொயிட்டியா என்ற ஆர்மி வீரரின் திருமணம் நடைபெற்றது. பெங்களூருவில் பயிற்சி பெற்று மீரட்டில் பணிபுரியும் ஆகாஷ், தனது திருமணத்திற்காக விடுமுறையில் இருக்கிறார்.

அந்த கிராமத்தில் தாக்கூர் கோலி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் குமார் திருமணத்தில் குதிரையின் மீது சவாரி செய்து ஊர்வலம் வரக்கூடாது, அப்படி வந்தால் திருமண நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்துவோம் என்று முன்பே எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் ஆகாஷ் முன்னெச்சரிக்கையாக போலீஸில் புகார் ஒன்றை அளித்து பாதுகாப்பு கோரி இருந்தார். போலீஸும் அவருடைய திருமண ஊர்வலத்திற்கு 7 போலீஸை அனுப்பி வைத்தது.

போலீஸ் பாதுகாப்பு இருந்தும் அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் கல்லை எடுத்துக்கொண்டு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மேல் எரிய தொடங்கிவிட்டனர். இதனால் போலீஸ் மணமகனை அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர். மணமகனின் சொந்தக்காரர்கள் மூவருக்குதான் தீவிரமாக காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் 50லிருந்து 60 போலீஸார் வரை அந்த கிராமத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். அதன்பின் முழு பாதுகாப்புடன் மணமகனை மணமகளின் கிராமத்திற்கு அழைத்து சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் பதினொரு பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.