Skip to main content

கல் எறியும் திருவிழா... 400 பேர் காயம்...

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கல் எறியும் திருவிழாவில் கற்கள் தாக்கியதில் 400க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காயமடைந்துள்ளனர்.

 

stone pelting function in madhyapradesh

 

 

மத்திய பிரதேசத்தின் ஜாம் நதிக்கரையில் உள்ள இரு கிராமங்களில் இந்த திருவிழா நடைபெறும். பந்தூர்னா மற்றும் சவரகோன் ஆகிய இரு கிராமங்களும் இந்த நதிக்கரையில் உள்ளன. இந்த திருவிழா நாளன்று இந்த இரு கிராம மக்களும் நதிக்கரையில் கூடுவர். ஆற்றின் நடுவில் கம்பத்தில் கொடி ஒன்று நடப்பட்டிருக்கும். இந்த கொடியை யார் எடுக்கிறார்களோ அந்த கிராமமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த கொடியை யார் எடுப்பது என்ற போட்டியில் இரு கிராமத்தினரும் வேகமாக முன்னேறுவர். அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடியை எடுத்து விடாமல் தடுக்க எதிர் கிராமத்தை சேர்ந்தவர்கள்  கற்களை எறிந்து தடுப்பார்கள். இறுதியில் இந்த கல் அடிகளையும் மீறி எந்த கிராமத்தை சேர்ந்தவர் கோடியை எடுக்கிறாரோ அந்த கிராமமே இதில் வென்றதாக அறிவிக்கப்படும்.

நேற்று மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த திருவிழாவில் 400 பேர் காயமடைந்தனர். இதில் 12 பேர் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பந்தூர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், அவர் காதலித்த சவரகோன் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஜாம் நதியை கடந்த போது அவர்கள் இருவரையும் சவரகோன் கிராமத்தினர் கற்களை கொண்டு தாக்கியதாகவும், அப்போது பந்தூர்னா கிராமவாசிகள் அவர்களை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதன் நினைவாகவே ஆண்டுதோறும் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

“காங்கிரஸ் அழிவிற்கு ராகுல் காந்தியே காரணம்” - நீக்கப்பட்ட தலைவர் பகீர் குற்றச்சாட்டு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Acharya pramod said Rahul Gandhi is responsible for the destruction of Congress

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் பலர், அக்கட்சியில் இருந்து விலகி தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இது, காங்கிரஸுக்கு பெரும் பின்னடவை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் பச்சோரி, முன்னாள் எம்.பி கஜேந்திர சிங் ரஜு கேதி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கடந்த 9ஆம் தேதி காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இது மத்திய பிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுரேஷ் பச்சேரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்று கூறிய காங்கிரஸ், இப்போது சாதியைப் பற்றி பேசுகிறது. கடந்த சில நாட்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்து அவர்கள் எடுத்த முடிவு என்னை கலக்கமடையச் செய்தது. அதில், குறிப்பாக, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை நிராகரித்த விதம் எனக்கு ஏமாற்றமளித்தது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.கவில் இணைய முடிவு செய்துள்ளேன்” என்று கூறினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம், உத்தரப்பிரதேசத்தில் நேற்று (10-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, மூத்த காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சேரி வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ராகுல் காந்தி இயக்கும் கப்பலில் இருந்து அனைவரும் வெளியேறுவார்கள். மூத்த தலைவர்கள் உட்பட பலர், தேர்தலுக்குள்ளும் காங்கிரசை விட்டு வெளியேறுவார்கள். ராகுல் காந்தியின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் காங்கிரஸை கசப்பான முடிவை நோக்கியே கொண்டு செல்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் அழிவுக்கு காரணமான ஒரே நபர் ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி கட்சியில் இருக்கும் வரை காங்கிரஸை காப்பாற்ற முடியாது. ராமரைப் பற்றி தரக்குறைவாகப் பேசும் கட்சியில் யாரும் இருக்க விரும்பவில்லை. காங்கிரஸில் தொடர்ந்து நீடித்தால் தாங்கள் அழிந்து போவதை காங்கிரஸில் உள்ள பலர் உணர வேண்டும். ராமர் மீதான எதிர்ப்பின் மூலம் காங்கிரஸ் தனது அரசியல் அழிவின் நிலையையும், விரக்தியையும் அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ், இப்போது ராமர் எதிர்ப்பு மற்றும் சனாதன எதிர்ப்பு கட்சி. சனாதனத்திற்கு எதிராக நிற்பவர்களுடன் யார் நிற்பார்கள்?” என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்த போது, ஆச்சார்யா பிரமோத், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், ஜனவரி 22ஆம் தேதி அன்று அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். அதன் பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.