Skip to main content

கரோனாவால் சரிந்த பங்குச்சந்தைகள்! ஆனாலும் முதலீட்டுக்கு ஏற்ற காலம் இதுதான்! 

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

Capital


கரோனா வைரஸின் இரண்டாவது அலை விசுவரூபம் எடுத்துள்ளதால் திங்களன்று (ஜூன் 15) இந்தியப் பங்குச்சந்தைகளில் கரடியின் ஆதிக்கமே நிலவியது. இதனால் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிவடைந்தன. வீழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், முதலீடு செய்வதற்கு இதுதான் தக்க தருணம் என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
 


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தடாலடியாக 552.09 புள்ளிகள் சரிவடைந்து, நேற்றைய வர்த்தக நேர முடிவில் 33228 புள்ளிகளில் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் நேற்று துவக்கநிலை இண்டெக்ஸ் 33670 புள்ளிகளாக இருந்த நிலையில், ஒருகட்டத்தில் 32923.74 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. துவக்கநிலையும் அதிகபட்ச உயர்வும் ஒரே அளவில் இருந்தது. சென்செக்ஸில் வணிக கணக்குகளை மதிப்பிட உதவும் 30 பங்குகளில் நான்கு பங்குகள் மட்டுமே ஓரளவு விலை உயர்ந்தன. மற்ற 26 பங்குகளின் மதிப்பும் சரிவடைந்தன.

தேசிய பங்குச்சந்தையிலும் கரோனா தாக்கம் தன் வேலையைக் காட்டி இருந்தது. நிப்டியின் துவக்கநிலை இண்டெக்ஸ் 9919 புள்ளிகளாக இருந்ததால், சந்தை  நிபுணர்கள் கணிப்பின்பிடி நேற்றே 10000 புள்ளிகளை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப ஒருகட்டத்தில் நிப்டி 9943 புள்ளிகள் வரை எகிறின. பின்னர் படிப்படியாக சரிந்து வர்த்தக நேர முடிவில் 9813.70 புள்ளிகளில் நிறைவடைந்தன. அதாவது, முந்தைய நாள் நிலவரத்தைக் காட்டிலும் இது 159.20 புள்ளிகள் (1.60 சதவீதம்) சரிவாகும்.  
 

markets


நிப்டியின் 50 முக்கிய பங்குகளில் 8 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபம் கொடுத்தன. மற்ற 42 பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. 

கெயில் 3.68 சதவீதம், விப்ரோ 2.60 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 1.49 சதவீதம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.48 சதவீதம், சன் பார்மா 0.84 சதவீதம் ஆகிய பங்குகள் நிப்டியில் வளர்ச்சி கண்டன.

அதேபோல், தொடர்ந்து லாபம் கொடுத்து வந்த இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் 7.20 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. ஆக்சிஸ் வங்கி 4.49 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 4.42 சதவீதம், பஜாஜ் பைனான்ஸ் 3.93 சதவீதம், ஐசிஐசிஐ வங்கி 3.39 சதவீதம் சரிவடைந்தன.
 

markets


அதேபோல் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களின் பங்குகளின் வீழ்ச்சியும் சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணம். கரோனா தாக்கம் காரணமாக முதலீட்டாளர்கள், கையிருப்பில் உள்ள பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டியதும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்தியப் பங்குச்சந்தைகளை பதம் பார்த்துள்ளன.
 


''சில நாள்களுக்கு முன்பு நிப்டி 9544 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டிருந்தபோதும் வாரத்தின் துவக்க நாளில் (ஜூன் 15) 9813 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றிருப்பது, நேர்மறையாகவே பார்க்கப்படுகிறது. நடப்பு வாரத்தில் 10000 முதல் 10200 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், ஒவ்வொருமுறை பங்குகளின் மதிப்பு சரிவடையும்போதும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிப் போடுவதற்கு இப்போது ஏற்ற தருணம்தான்,'' என்கிறார் மோதிலால் ஆஸ்வால் நிதி சேவை நிறுவன ஆய்வாளர் அர்பித் பேரிவால்.

சந்தை நிலையற்றதாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். இந்நிலையில், ஸ்மால் கேப், மிட்கேப் பங்குகளில் அன்றைய நிலவரத்தைப் பொருத்து முதலீடு செய்யலாம். 

நீண்டகால முதலீட்டுக்கு...:

நீண்ட கால முதலீட்டை விரும்புவோர் ரிலையன்ஸ், மைண்ட்ரீ, பரோடா வங்கி, டாக்டர் ரெட்டி, ஹிண்டால்கோ, லூபின், காட்ரெஜ், அப்பல்லோ ஹாஸ்பிடல், ஹெச்சிஎல் டெக், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பங்குகளில் முதலீடு செய்யலாம்.

குறுகிய கால ஆதாயம்:

பேஜ் இண்டியா, டிவிஸ் லேப், நேஷனல் அலுமினியம், ஐடிஎப்சி பர்ஸ்ட், ஐடிசி, கம்மின்ஸ் இண்டியா, ஆர்பிஎல் வங்கி, ஐஜிஎல் கெடிலாக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஓரிரு காலாண்டிற்குள் ஆதாயம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மிகக்குறுகிய கால முதலீட்டுக்கு:

அப்பல்லோ டயர், டாடா பவர், செஞ்சுரி டெக்ஸ், பயோகான், கெயில், ஓன்ஜிசி, சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மிகக்குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவை என்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


வாங்கும் ஆர்வம்:

ஜூபிலாண்ட் லைப், டிவி18 பிராட்காஸ்ட், டாடா கம்யூனிகேஷன்ஸ், சுமிட்டோமோ கெமிக்கல் இண்டியா, ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் அதிக ஆதாயம் தரக்கூடியவை என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவுவதால் இப்பங்குகளுக்கு சந்தையில் இன்றும் (ஜூன் 16) அதிக தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.