anil agarwal

டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தமிழகத்தில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு இடத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் இந்தியா முழுவதும் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செய்லபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வேதாந்தா நிறுவனத்தின் இன்னுமொரு தொழில்முறை காப்பர் உருக்குவது. தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் வேதாந்தாதான். தற்போது ஹைட்ரோகார்பனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர், பேசிய இந்நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால்,” தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். விரைவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்” என்றும் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.

Advertisment