Skip to main content

தீபாவளிக்கு திருட்டு கரண்ட்; பணியிட மாற்றம் செய்ய லஞ்சம் - குற்றச்சாட்டுகளால் மோதிக்கொள்ளும் காங்கிரஸ், மஜத

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா அதிகாரிகளின் பணியிட மாற்றத்திற்குப் பணம் வசூலிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, பணம் கேட்டு பேரம் பேசுவது போன்ற வீடியோ இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ காட்சி வெளியாகி கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

வெளியான வீடியோவில் பேசும் யதீந்திரா, ‘அப்பா... விவேகானந்தா என்பவர் எங்கே. மகாதேவிடம் நான் 5 எண்ணிக்கை பட்டியல் கொடுத்துள்ளேன். அவரிடம் தொலைபேசியை தாருங்கள். நான் கொடுத்ததை தவிர்த்து வேறு ஏதேதோ வருகிறது. இதை யார் தந்தார்கள் நான் கொடுத்ததை மட்டும் செய்யுங்கள்' என பணியிடம் மாற்றம் குறித்து பேசுவதாக அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

சித்தராமயாவின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள சித்தராமையா 'கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மட்டுமே இந்த வீடியோவில் பேசுகிறார். நானும் பார்த்தேன். நீங்கள் வீடியோவை நன்றாக பாருங்கள். ஏதாவது ஒரு இடத்திலாவது பணி மாற்றம் குறித்தோ, பணம் குறித்தோ அவர் பேசியுள்ளாரா? இதனை பணியிட மாற்றத்திற்கு தொடர்பு ஏற்படுத்தினால் எப்படி? அரசாங்கத்தில் பணியிட மாற்றம் என்பது மிகவும் சாதாரண நிகழ்வு. 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக அமைச்சராக பதவி ஏற்றேன். எனது இத்தனை வருட அரசியல் பயணத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் பணம் பெற்றுக் கொண்டு பணியிட மாற்றம் செய்தேன் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேற தயார்' என்று தெரிவித்துள்ளார்.

 

''Stealing current for Diwali; Congress, Majda clash over allegations of 'money for job transfer'

 

தீபாவளி தினத்தன்று குமாரசாமி வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, மின்சாரம் திருடப்பட்டதாக காங்கிரஸ் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியதோடு, போஸ்டர்கள் ஒட்டி இருந்தது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே குமாரசாமி இதுபோன்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை பரப்பி வருவதாக கர்நாடகா காங்கிரசினர் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.