Skip to main content

இறுதி கட்டத்தில் இரும்பு மனிதரின் சிலை...

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
sardhar


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் மிக உயர்ந்த சிலை, கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சிலை குஜராத்திலுள்ள நர்மதா நதிக்கரையில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட இருக்கிறது.
 

ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள இச்சிலை உலகின் மிக உயரிய சிலை ஆகும். சர்தார் பட்டேலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 182 மீட்டர் உயரம் கட்டப்படுகிறது. இது சது தீவு என்னும் நர்மதா நதிக்கரையோரம் கட்டப்படுகிறது. மேலும் இச்சிலையில் 153 மீட்டரில் நின்று மக்கள் இந்த பரந்த உலகை பார்க்கும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடிகளில் ஊழல்... சர்ச்சையில் ஒற்றுமையின் சிலை...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

embezzlement in statue of unity tickets

 

 

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வல்லபாய் படேலின் சிலைக்கான பார்வையாளர் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.5.24 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலை அம்மாநிலத்தின் மிகமுக்கிய சுற்றுலா தளமாக உருவெடுத்துள்ளது. இந்த சிலையைக் காண வரும் பார்வையாளர்களிடம் பார்வையாளர் கட்டணம் வசூலித்து, அந்த தொகையைத் தனியார் ஏஜென்சி ஒன்றின் மூலம் வதோதராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், கடந்த 2018 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை பார்வையாளர் கட்டண வசூல் தொகைக்கும் வங்கி டெபாசிட் தொகைக்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வங்கி நடத்திய விசாரணையில், வசூலித்து வந்த தொகையை வசூல் ஏஜென்சி ஊழியர்கள் வங்கியில் செலுத்தாமல் ரூ.5,24,77,375 ஊழல் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி அளித்த புகாரின் பேரில் ஏஜென்சி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Next Story

"கரோனா தடுப்புக்கு நிதி திரட்ட 'ஒற்றுமையின் சிலை' விற்பனைக்கு"... Olx -ல் விளம்பரம் செய்த நபர்...

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதித்தேவை ஏற்பட்டுள்ளதால் ஒற்றுமையின் சிலை விற்பனைக்கு வந்துள்ளது எனக்கூறி Olx -ல் விளம்பரம் பதிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

 

man puts ad on olx to sell statue of unity

 

 

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதித்தேவை ஏற்பட்டுள்ளதால் ஒற்றுமையின் சிலை விற்பனைக்கு வந்துள்ளது எனக்கூறி Olx -ல் விளம்பரம் பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குஜராத்தில், 182 மீட்டர் உயரத்துடன், உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமைமிகு இந்த சிலை கடந்த 2018 ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.ஆயிரக்கணக்காகச் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்லும் இந்தச் சிலையை நிதிப்பற்றாக்குறை காரணமாக ரூ. 30,000 கோடிக்கு விற்பனை செய்வதாக ஒரு நபர் Olx ல் விளம்பரம் செய்துள்ளார். இந்த விவகாரம் செய்தித்தாள்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில்,அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.மேலும், குஜராத்தின் நர்மதா மாவட்டப் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விளம்பரத்தைப் பதிவிட்ட நபரைத் தேடி வருகின்றனர்.