ADVERTISEMENT

அவரை பார்த்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் பயம்- ஸ்டாலின்

01:57 PM Jan 19, 2019 | santhoshkumar

ADVERTISEMENT

இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஒருங்கிணைந்த இந்தியா என்று பெயரில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதில் ஒரு பகுதி.

ADVERTISEMENT

இந்தியாவின் இரண்டுவது சுதந்திர போராட்டத்திற்காக இந்த பொதுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரின் சிந்தனையும், அதற்காகத்தான் இங்கு கூடியிருக்கிறோம். இந்த பேரணியின் நோக்கமும் அதுதான்.

எதிரியே இல்லை என கூறி வந்த மோடி அண்மையில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார். நாம் ஒன்று சேர்ந்திருப்பதை பார்த்து நரேந்திர மோடி பயப்படுகிறார். அந்த பயத்தினால் ஏற்பட்ட கோபத்தால் அனைத்து எதிர்க் கட்சிகளையும் விமர்சிக்கிறார் மோடி.

கடந்த நான்கு ஆண்டுகளின் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை, மம்தாவை கண்டு மோடி, அமித்ஷாவுக்கு பயம். மேலும், மம்தா பானர்ஜியை இரும்பு பெண்மணி என புகழ்ந்தார் ஸ்டாலின்.

கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்று மக்களை ஏமாற்றினார் மோடி என்று கூறினார் ஸ்டாலின்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT