Skip to main content

கடத்தலுக்குப் பயன்பட்டதாயென விசாரிக்கும் முன்னரே... படகை மீட்டு இலங்கை அதிகாரிகள்....!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

ss

 

இராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று நள்ளிரவில் கரை ஒதுங்கியது. இலங்கை படகு கரை ஒதுங்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் படகை கைப்பற்றி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என விசாரணை மேற்கொண்ட நிலையில், இலங்கையிலிருந்து வந்த அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காமால் படகினை மீட்டு இலங்கைக்குக் கொண்டு சென்றனர்.

 

உள்ளூர் மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் சேரன் கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ள படகை கைப்பற்றி, அதிலிருந்த மீன்பிடி வலை, இரண்டு மண்ணெண்ணெய் கேன் மற்றும் சுசூகி இஞ்சினை இனம் கண்டு, குறிப்பிட்ட படகு இலங்கையின் மன்னார் மாவட்ட பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகித்தனர்.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடல்வழியாக கொண்டு வருவதும் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில், தற்போது சேரன் கோட்டை பகுதியில் படகு நிறுத்தி வைத்திருப்பதால் கடத்தலில் ஈடுபட வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

 

இந்நிலையில், வியாழனன்று இலங்கையிலிருந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், "இலங்கை மன்னார் மாவட்டம் வங்காலை பகுதியிலிருந்து நேற்று இரண்டு மீனவர்களுடன் மீன் பிடிக்க வந்த படகு இது" எனக் கூறி சப்தமில்லாமல் படகினை மீட்டு சென்றுள்ளனர். மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் செய்வதறியாது திகைக்க, "இலங்கை மீனவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா" என போர்க்கொடி தூக்கியுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.