Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் பலி

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 


இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.  பலியான   இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.   குண்டுவெடிப்பில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

 

s


இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.   500 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   உயிரிழந்தவர்களில் 35 பேர்  அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.   இதில் 5  இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.  

 

சார்ந்த செய்திகள்