ADVERTISEMENT

எனக்குத் தண்ணீர் கொடுங்க... நெஞ்சைக் கணக்க வைத்த அணிலின் செயல்!

12:13 PM Jul 18, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒன்றைச் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித இனம், விலங்கினம், தாவர இனம் என அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்ந்து வருகின்றது.

இதனைச் சங்கிலித் தொடர் என்று அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள். அந்த வகையில் சாலையில் சென்றவர்களிடம் அணில் ஒன்று மனிதர்களைப் போன்றே தாகம் எடுப்பதாகக் கூறி தண்ணீர் குடித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அணில் அந்த இளைஞரிடம் சென்று கையை மேலே தூக்கி எனக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் அணில் கேட்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு அணில் தண்ணீர் கேட்பதை அவர் புரிந்து கொண்டு கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அதன் வாய் அருகே கொண்டு சென்றுள்ளார். அணிலும் மனிதர்களைப் போல் தண்ணீர் குடித்து தன்னுடைய தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT