நீருடன் நெருப்பை உமிழும் அடிபம்பு... குழம்பித் தவிக்கும் கிராம மக்கள்!

that spits fire with water... Shocking video

மக்களால் பயன்படுத்தப்படாத அடிபம்பு குழாயிலிருந்து தண்ணீரோடு தீயும் சேர்ந்து வெளியாகும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பஜ்வாஹா அருகே உள்ள கச்சார் என்ற கிராமத்தில் அடிபம்பு குழாய் திறக்கப்பட்ட நிலையிலிருந்தது. இந்நிலையில் அதனுள்ளே இருந்து திடீரென தண்ணீர் பீறிட்டுக் கொண்டு வெளிவந்ததோடு அதனுடன் நெருப்பும் சேர்ந்து வெளியானது. அதுவும் பள்ளி வளாகத்திற்கு அருகிலிருந்த அடிக்குழாயில் நீரும் நெருப்பும் ஒரு சேர வெளியேறியது அந்த பகுதியிலிருந்த கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அங்கிருந்து சிலர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முழு ஆய்வுக்குப் பின்னரே இதற்கான காரணம் என்னவென்று தெரிய வரும் என்கின்றனர் புவியியல் ஆய்வாளர்கள்.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/ghrwVJ8ba1s.jpg?itok=CS3y7rB3","video_url":" Video (Responsive, autoplaying)."]}

borewell fire MadhyaPradesh water
இதையும் படியுங்கள்
Subscribe